
பெண்ணே!
நாடு - நதி
மண் - மலை
ஏன்?
உலகே உன் பெயரால்தான்
குறிக்கப்பெருகிறது.
மென்தென்றல்
வன்புயல்
மல்லிகை
மலைத்தேன்
பால்நிலவு
பனிப்பொழிவு
மொழியின் மொத்த வார்த்தைகளில்
எத்தனை விழுக்காடு
உனக்கு உவமையாய். . .
உருவகமாய்…
பெண்ணே!
பெருமைப்படு
உலகமா உன்னை பெற்றெடுத்தது?
இல்லையில்லை. ..
நீதானே உலகத்தை பெற்றெடுத்தாய்?
அடுப்படிதாண்டிய
ஐம்பதாவது ஆண்டு விழாவை
கொண்டாடி முடித்துவிட்டார்கள்
நம் இந்தியச் சகோதிரிகள்
ஆனாலும் இவர்களுக்கு
இன்னுமும் இருக்கிறார்கள்
அரசியல் எதிரிகள்
புரிந்துகொள்ளுங்கள் எதிரிகளே!
இன்று பெண்கள் புகாததுறையேயில்லை!
ஆண்களுக்கு சரிநிகராய்
ஆற்றுகிறார்கள் பணியை
குறையேயில்லை!
பாராளுமன்றத்தை
நல்வழியில் நடத்துகிறாள்
பால்வழிப்பாதையில்
கோள்களைக் கடத்துகிறாள்
உலகவிளையாட்டரங்கில்
முதல் பரிசு பெறுகிறாள்
உயிர் பயம் துளியுமற்று
இராணுவத்திற்கு வருகிறாள்....
ஓவியம் தீட்டுகிறாள்….
தொடர்வண்டி ஓட்டுகிறாள்…
பேனா பிடிக்கிறாள்…
பிணத்தை எறிக்கிறாள்….
புரிந்துகொள்ளுங்கள் எதிரிகளே!
இன்று பெண்கள் புகாததுறையேயில்லை!
ஆண்களுக்கு சரிநிகராய்
ஆற்றுகிறார்கள் பணியை
குறையேயில்லை!
வெற்றிபெற்ற ஆண்களின் பின்னால்
பெண்கள் இருந்த காலம்மலையேறிற்று.
தற்போது-
பெண்களே வெற்றிமலையேறும்காலம் வந்திற்று.
இதையெல்லாம் உணராமல்
உளறித்திரியும் ஒருசிலரை
திருத்தவே முடியாது
இவர்களின் வெற்றுப்புலம்பலால்
பெண்களின் முன்னேற்றத்தை
நிறுத்தவே முடியாது
அவர்கள் கிடக்கிறார்கள்
ஆறாம் அறிவை அடகுவைத்தவர்கள்!
கவலையைவிடுங்கள்!
காற்றிடம் கொஞ்சம் காதுகொடுங்கள்!
ரகசியம் ஏதோ சொல்கிறது.
நான்வேண்டுமானால் கேட்டுச்சொல்லவா?
பெண்ணடிமைவாதிகளைப்பற்றி
தற்போதைக்கு கேள்வியில்லையாம்
மசோதாவே தோற்றாலும்
எம் மகளீர்க்கு தோல்வியில்லையாம்.
புதுவைப்பிரபா