ஆண்றொன்றிற்கு பல லட்சம் உயிர்களை உலக பரப்பில் அபகரித்துக்கொள்ளும் உயிர்கொல்லி நோய், “புற்றுநோய்’’ என்று பரவலாக பேசப்படும் நிலையில், நிகழும் மரணங்களுக்கு நோய் மட்டுமே காரணமில்லை என்கிற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். புற்றுநோய் என்றாலே மரணம் என்கிற மனப்போக்கால் விளைகிற பயமும், அவநம்பிக்கையுமே பெரும்பாலான நோயாளிகளை கொன்றுவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், புற்றுநோய் தொடக்க நிலையில் இருக்கும்போதே, உடலில், குறிப்பாக அது தாக்கியிருக்கும் உறுப்பில் ஏற்படும் மாற்றங்களை நாம் கவனிக்காமல், சிலசமயம் கவனித்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால், அது முற்றி, மருத்துவத்தின் கைகளுக்கு பிடிபடாமல் போய்விடுகிறது. புற்றுநோயை பொருத்தவரை அது தொடக்க நிலையில் கண்டறிய பட்டால், இன்றைய மருத்துவதொழில்நுட்பம், அதை எளிதில் குணப்படுத்திவிடுகிறது. ஆனால். . . நோயின் தொடக்க நிலை அறிகுறிகளை உணர போதுமான விழிப்புணர்வு மக்களின் மத்தியில் இல்லாமையே, இறப்புவிகிதம் ஏறுமுகமாக இருக்க வழிவகுத்துவிடுகிறது. இன்றைய நிலையில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளே நோயின் தொடக்க நிலையில் கண்டறிந்து மருத்துவம் செய்துகொண்டு பூரண குணமடைகிறார்கள்.
விழித்திரு :
உடலை உற்றுநோக்கும் பழக்கம் நம்மிடையே இல்லாததால் நம் உடலில் ஏற்படும் சின்ன மாற்றங்களைக்கூட நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். குறிப்பாக, வாயின் உட்புறத்தில் தோன்றும் சிறு புண்கள், மார்பக பரப்பில், உட்புறத்திலோ வெளியிலோ வளரும் சின்ன கட்டிகள், தோலில் நிற மாறுதல்கள், சிறுநீரில் இரத்தம்போக்கு. . . போன்றவை. இவை யாவும் நூறு சதவிகிதம் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கத் தேவையில்லை. ஆனால், அதை, மருத்துவ பரிதோதனை மூலம் உறுதி செய்து கொள்ளுதல் அவசியம். உணவு கட்டுப்பாடோ அல்லது கடும் உடற்பயிற்சியோ மேற்கொள்ளாத நிலையில் உடல் எடை குறைந்து கொண்டே போகுமானால் நமக்கு நாமே காரணங்களை சொல்லி, நியாயப்படுத்திகொண்டு, மருத்துவ பரிசோதனைகளை நிராகரித்துவிடக்கூடாது. அனால் சமூகத்தில் நிலவும் பொதுக்கருத்துபடி, எடுத்ததும், ~~எனக்கு கேன்சரா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு என்று சொன்னீர்களானால், “உன்வாயில் வசம்பு வைச்சு தேய்க்க! எடுத்ததும் எதுக்கு ஏடாகூடாமா நினைக்கிற! அதெல்லாம் எதுவும் இருக்காது! போய் வேலையை பாரு!’’ என்று ஆத்திரப்பட்டு பேசுபவர்கள் தான் அதிகமிருப்பார்கள். இந்த அலட்சியத்தின் ஆணிவேரை பிடுங்கினாலே போதும், அவணியில் பலரின் புற்றுநோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டுஅறிந்து கொள்ளும் சூழல் தோன்றும்.
தவிர்திரு:
எந்த நோயாயினும் அது வரும்முன் காக்க வேண்டியது நம் கடமையல்லவா? அதுபோலவே, இந்த நோய் வருவதற்கான அதிகபட்ச சாத்தியக்கூறுகள் உள்ள செயலை முற்றிலும் தவிர்த்துட நாம் உறுதியாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, புகையிலையின் பயன்பாடு. மின்னலும் இடியையும் போலத்தான் புகையிலையும் புற்றுநோயும் . புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் வாய் அல்லது தொண்டை அல்லது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். நோய் வந்த பின் பணம் செலவழித்து மருந்துவாங்குவதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் பணம் செலவழித்து, நோயையே வாங்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.? அதிக நேரம், சூரியக்கதிர்வீச்சோ அல்லது அணு உலைகளின் கதிர்வீச்சோ, மேலே படும்படும்படி பணிபுரிபவராக இருந்தால், இயன்றவரை அக்கதிர்வீச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறிப்பிட்ட இடைவேளையில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அடிக்கடி வரும் காய்ச்சல் உடல் அசதி போன்றவை , இரத்த புற்றுநோய்களுக்கான ஆரம்ப கால அறிகுறிகள் என்பதை இத்தகையோர் நினைவில் கொள்ள வேண்டும். உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ளுதல், புகையிலை பயன்படுத்தாதிருத்தல், கதிர்வீச்சில் சிக்காதிருத்தல், மாசு படிந்த சூழலில் வாழ்தலை தவிர்த்தல் போன்றவை புற்றுநோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும். மகளீர்க்கு, மார்பகங்களில், உட்பற வெளிப்புற மாறுபாடுகள், முலைக்காம்புகளில் நீர் வடிதல், மாதவிடாய் தவிர்த்த காலங்களில் ரத்தப்போக்கு ஆகியவை முறையே, மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக பொதுவாக சொல்லப்படுபவை. ஆனால், முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதன் மூலம்தான் அதை உறுதி செய்துகொள்ள முடியும்.
மீட்டெடு:
புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஏனெனில், அது பாக்டீரீயா - வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படுவதில்லை. அது கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சியால் உண்டாவது. உண்மையை சொல்லப்போனால் புற்றுநோய் வருவதற்கு இவை இவையே காரணம், இன்னார் இன்னாருக்குத்தான் வரும் என்று அறுதியிட்டு எதையும் கூறிடமுடியாது. ஒருவேளை, நாம் விழிப்புணர்வோடு எச்சரிக்கையாய் இருந்தும், இந்த நோயின் பிடியில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். அத்தகைய நேரத்தில், அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்யாமல், கனத்த மனதிடத்துடனும், நலமாகும் நம்பிக்கையுடனும் சிகிச்சையை எதிர்கொள்ளவேண்டும். இத்தகைய மனநிலையே, நோயின் வீரியத்தை குறைத்து, உட்கொள்ளும் மருந்தின் வினையாற்றலை அதிகரிக்கும். ஆக… இயன்றவரை புற்றுநோய் வராமல் உடல்நலம் காப்போம். மீறி வந்தாலும், நம்பிக்கையோடிருந்து நம் உடலை அந்நோயிடமிருந்து நல்லபடி மீட்போம்.
புதுவைப்பிரபா
Thursday, February 9, 2012
Wednesday, February 1, 2012
Tuesday, January 31, 2012
நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதைப்போட்டிக்கான கதை
நம்பிக்கை நடவுகள்
வகுப்பை முடித்துவிட்டு வெளியேறியபோதுதான் கவனித்தாள், சத்யாவின் கண்கள் சிவந்திருந்ததை. தொடர்ச்சியாக அழுதது ஒரு காரணியாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேராசிரியை பிரவீணா, "சத்தியா. . . . .என்ன பிரச்சனைம்மா? உடம்பு கிடம்பு சரியில்லையா? ”
சத்யா வார்த்தைகளால் சொல்லாமல், ஏதுமில்லை என்பதை தலையசைப்பால் சொன்னாள்.
"ஏய் . . . . பொய் சொல்ற. . . எனக்கு ஒன்னபத்தி நல்லா தெரியும். நீ எதுக்கும் அவ்வளவு சீக்கிரம் அழமாட்டீயே!”
சத்யா அதை ஆமோதிப்பதுபோல் மௌனமாய் 'தலைகுனிந்து’ நின்றாள்.
பிரவீணா பக்கத்து தோழியிடம் கேட்டாள். "என்னமா. . . பிரச்சனை உங்களுக்குள்ள? எதாவது சண்டையா?”
"தெரியலைலிங்க மேடம். ரெண்டு நாள் லீவுக்கு சொந்த கிராமத்துக்கு போய்ட்டு வந்தா. வந்ததிலிருந்து இப்படிதான் அழுதுக்கிட்டு இருக்கா. ஹாஸ்டல் ரூம்மேட்ஸ் எல்லோரும் கேட்டு பார்த்துட்டோம. வாயே தொறக்கமாட்றா மேடம்” பக்கத்தில் இருந்தவள் நட்பு கலந்த பாசக் கவலையோடு சொன்னாள்.
"சரி நீ காலேஜ் முடிஞ்சதும் என்ன வந்து பாரு! லேப்லதான் இருப்பேன்.”
"ஏய் அவ வரலன்னாலும் நீங்க வலுகட்டாயமா கூட்டிட்டு வாங்கடீ!”
வேண்டுகோளை முன்வைத்துவிட்டு நகர்ந்தாள்.
சம்பளத்துக்கு மட்டுமே பேராசிரியர் வேலை பார்க்கும் பெரும்பாலானோர்கள் மத்தியில் பிரவீணா தனியே தெரிவாள். இயந்திரத்தனமாக பாடம் நடத்திவிட்டு போவது மட்டுமல்ல அவள் வேலை. ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்து, அவர்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க துடிக்கும் உள்ளம் அவளுக்கு.
மாணவிகளின் பிரச்சனை மட்டுமல்ல, உடன் பணிபுரிவோரின் பண-மன பிரச்சனைகளைக்கூட தீர்க்க முனைபவள்.
மாலை.
தோழிகள் சத்யாவை அழைத்துவந்து பிரவீணாவிடம் ஒப்படைதார்கள். அதற்காக எதிர்பார்த்திருந்தவளாய் "அப்பாடா . . . வந்துட்டாளா! நீங்க மட்டும் இவள கூட்டிட்டு வரலேன்னு வச்சுக்கோங்களேன். நானே. . . ஹாஸ்டலுக்கு வந்துடறதுன்னு இருந்தேன்.”
"சரிம்மா. சத்தியா. . .இப்பவாது வாயை தெ}ற. ஊருல என்ன பிரச்சனை?”
" ……”
" உனக்கு கல்யாண ஏற்பாடு ஏதாவது பண்ணிட்டாங்களா?”
"ஐயோ. . . இல்லிங்க மேடம்” என்று அதிர்ச்சியோடு வாய் திறந்த சத்யா, பின்னால் திரும்பி தோழிகளை பார்த்து தயங்கினாள்.
"சரி ஏம்பா . .. . நீங்க இவளுக்காக வெய்ட் பண்ண வேண்டாம். நீங்க கிளம்புங்க. நானே இவள ஹாஸ்டல்ல விட்டுட்டு போறேன்.”
அவர்கள் புறப்பட்டு போனதும் சத்யா, "மேடம் . . . எப்படி சொல்றதுன்னே தெரியல்ல. .. . .”
"பரவாயில்ல சொல்லு”
"எங்கம்மா சாகபோறாங்க மேடம். அவங்களுக்கு கேன்சராம் .” அடக்க முடியாமல் அழுதாள்.
"…ம்ம்…என்ன கேன்சர்?”
"பிரஸ்ட் கேன்சர்”
"ஏய் … அழறத நிறுத்து கேன்சர்னாவே செத்துடுவாங்கன்னு அர்த்தமில்ல சத்யா. அதுவும் பிரஸ்ட் கேன்சர்லாம் இப்போ சாதாரண விஷயம்.”
"இல்ல மேடம். ஆப்பேரஷன் பண்ணனும், அப்புறம் ஏதோ ரேடியேஷன். . . கீமோ . தலைமுடியெல்லாம் கொட்டி, உடல் எலச்சி . . . ” வாக்கியத்தை உடைத்து " எங்கம்மாவ … அப்படியெல்லாம் பார்க்க முடியாது. மேடம். . . என்னால ”
"அடி பைத்தியக்காரி…, கையில அடிப்பட்டு எலும்பு முறிஞ்சிடுச்சு: மாவு கட்டு போடல..? ஒருமாசம் ரெண்டு மாசம் அந்த கட்டோடவே திரியறதில்ல…? அப்புறம் அவுத்துடறதில்ல…? அது, அதோட ப்ரொசிஜர். அதுபோலத்தான் கேன்சர் டிரீட்மென்ட்டுக்கும் சில ப்ரொசிஜர் இருக்கு. அத பாத்து பயந்தா எப்படி? உனக்கு ஒன்னு தெரியுமா? ஏதோ வரகூடாத வியாதி உங்கம்மாவுக்கு மட்டும் வந்துட்டதா நீ நெனைக்கிறதாலதான் நீ ரொம்ப பதட்டப்படுற, அழுவுற. இப்பலாம் நகரமோ கிராமமோ , நூத்துக்கு பத்து பேருக்கு இது வந்துடுது. படிச்சவ. . . நீதான் அம்மாவுக்கு இதெல்லாம் எடுத்து சொல்லனும். நீயே அழுதுகிட்டிருந்தா . . . ம்ம்?.”
"மேடம். . . நாங்க யாருக்கு என்ன பாவம் பண்ணிணோம்?”
"ச்சீ. .ச்சீ . . பாவம் புண்ணியம் பார்த்து வருமா நோய்? அதுவும் கேன்சர் ஒரு சூழல் தொடர்பான நோய்தானே தவிர, இது தான் காரணம்ன்னு சொல்ல முடியாது. அதே மாதிரி பெரியவங்களுக்கு வரும்… ஏழைகளுக்கு வரும.;.., பெண்களுக்கு வரும்ன்னு பேதம் பிரிச்சி சொல்ல முடியாது. ஓன்னு தெரியுமா…? பிரஸ்ட் கேன்சர் ஆண்களுக்கு வருது.”
"இல்லங்க மேடம். எங்கம்மாவும் ஏதோ சாகப்போற மாதிரியே பேசறாங்க. அக்காகிட்டயும், எங்கிட்டயும் .. . . என்னென்னவோ சொல்றாங்க. ..”
"படிச்ச புண்ணாக்கு… ஒனக்கே அந்த நோய் ஒரு உயிர்கொல்லி நோயாத்தான் தெரியுது. பாவம் அவங்க படிக்காதவங்க. தோ. .. பாரும்மா. . . கேன்சர் டிரீட்மென்ட்டு வெறும் மருந்து சம்மந்தப்பட்டதுமட்டுமில்ல. மனம் சம்மந்தப்பட்டதும். உறுதியான நம்பிக்கையோட, பாஸிட்டீவ் உணர்வோட, எதிர்கொண்டு மருத்துவம் பார்த்துக்கிட்டா சீக்கிரம் குணமாயிடும். இந்த உணர்வ நீதான் அம்மாவுக்கு கொடுக்கனும்.”
"அப்போ”
"பயப்படத் தேவையில்ல. அப்புறம்…இது கட்டி கிட்டின்னு,பச்செல…லேகியம்…அது இதுன்னு கிராமத்து வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்காம ,உடனே ,இந்த வியாதிய குணப்படுத்தறதுக்காகவே இயங்கிட்டிருக்கிற அரசு அல்லது தனியார் மருத்துவ மனையில சேருங்க.”
"மேடம் . . .. . இந்த விஷியத்த நான் யாருகிட்டையும் சொல்லல. நீங்களும்….” சத்யா கூட்டி முழுங்கினாள்.
" சொல்லமாட்டேன் மோதுமா? சரி. சொன்னா… உங்கம்மாவுக்கு வந்தது, உனக்கு தொத்திகிட்டு, அவங்களுக்கும் தொத்திக்கும்ன்னு நெனப்பாங்களா? தொத்து வியாதியா இது.?” புறப்பட தயாரானாள் ,பிரவீணா.
"மேடம். . . எங்க அக்காகூட கேட்டா !”
"என்ன… தொத்திக்குமான்னா?”
"ம்கூம். அம்மாவுக்கு வந்ததால… எங்களுக்கும் வருமான்னு. .?”
"தொன்னூத்தியஞ்சு சதவிகிதம் வாய்ப்பில்ல. பாரம்பரிய மரபணுக்கலால வர்ற வாய்ப்பு ரொம்ப ரொம்ப கொறைவு. முன் ஜாக்கிறதையா இருந்து 35 வயசுக்கு மேல, வருசத்திற்கு ஒருமொறை ‘மேமோகிராம்’ பரிசோதனை செஞ்சிக்கிட்டா, அந்த பயமும் வேணாம். சரி. கௌம்பலாமா? நான் உன்ன ஹாஸ்டல்ல விட்டுட்டே போறேன்.”
" மேடம், ஒங்களுக்கு எதுக்கு சிரமம் நானே போயிக்கிறேன்”
"ச்சீ..வா! இன்னொரு விஷியம் தெரியுமா? இந்த காலேஜ்ல ஒரு புரொப்பஸர் பிளட் கேன்சர் பேஷன்ட். பத்து வருஷத்துக்கு முன்னாடி… ஏ.பி.எம்.எல்ன்னு ஒரு வகை பிளட் கேன்சரால அவதிபட்டு, அல்லல்பட்டு, அப்பப்பா…. நீ சொன்ன மாதிரி உடல் எலச்சி, தலை வழுக்கையாகி கன்னமெல்லாம் டொங்கு விழுந்து… ம்ம்ச்ச்;… ஆனா…. எனக்கு தெரிஞ்சி, மருந்துகளவிட அந்த நெலையிலேயும்; நம்பிக்கையோட இருந்ததுதான் அந்த ஜீவனோட ப்ளஸ்."
" பிளட் கேன்சரையும் குணபடுத்த முடியுமா மேடம்”
"ம்ம். இப்போ அதெல்லாம் சாதராணம்மா ஆயிடுச்சி. தொடக்க நெலையில கண்டுபுடிச்சிட்டா ரொம்ப ஈஸி.”
"யாரு மேடம் அந்த பேஷன்ட்?”
" நீ சொல்லு பார்க்கலாம் !”
"இங்கிலீஸ் புரொப்பஸர் இமாம் சார்…!”
பிரவீணா கலகலவென சிரித்தாள். "ஏய்.. அவர பார்த்தா அப்படியா தெரியுது? இரு இமாம் கிட்டேயே சொல்றேன்.”
" மேடம், மேடம்… மாட்டிவிட்டுடாதீங்க. ப்ளீஸ். ”
"ஏய்…சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். நான் தான் அந்த முன்னாள் கேன்சர் பேஷன்ட் ”
சத்யா பேரதிர்ச்சியானாள். பிரவீணாவை உச்சந்தலையிலிருந்து பாதம்வரை ஒருமுறை கூர்ந்துபார்த்துவிட்டு,
" மேடம்….”
"ஆமாம்டா.. இப்போ… ஐயம் ஆல் ரைட் அண்ட் நார்மல். வருஷத்துக்கு ஒரு தடவ, பீரியாடிக்கல் செக்-அப். அவ்வளவுதான்.”
"சரி. வா போலாம்” சத்யாவின் தோள் மீது கையை போட்டு நடக்க தொடங்கினாள், பிரவீணா.
சத்யாவின் கண்கள் மீண்டும் ஏனோ கலங்கியது. அவள் கழுத்தை திருப்பி , தன் தோள் மீது படர்ந்திருந்த பிரவீணாவின் கைவிரல் பகுதியில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்து நடக்கத்தொடங்கினாள்.
புதுவைப்பிரபா
வகுப்பை முடித்துவிட்டு வெளியேறியபோதுதான் கவனித்தாள், சத்யாவின் கண்கள் சிவந்திருந்ததை. தொடர்ச்சியாக அழுதது ஒரு காரணியாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேராசிரியை பிரவீணா, "சத்தியா. . . . .என்ன பிரச்சனைம்மா? உடம்பு கிடம்பு சரியில்லையா? ”
சத்யா வார்த்தைகளால் சொல்லாமல், ஏதுமில்லை என்பதை தலையசைப்பால் சொன்னாள்.
"ஏய் . . . . பொய் சொல்ற. . . எனக்கு ஒன்னபத்தி நல்லா தெரியும். நீ எதுக்கும் அவ்வளவு சீக்கிரம் அழமாட்டீயே!”
சத்யா அதை ஆமோதிப்பதுபோல் மௌனமாய் 'தலைகுனிந்து’ நின்றாள்.
பிரவீணா பக்கத்து தோழியிடம் கேட்டாள். "என்னமா. . . பிரச்சனை உங்களுக்குள்ள? எதாவது சண்டையா?”
"தெரியலைலிங்க மேடம். ரெண்டு நாள் லீவுக்கு சொந்த கிராமத்துக்கு போய்ட்டு வந்தா. வந்ததிலிருந்து இப்படிதான் அழுதுக்கிட்டு இருக்கா. ஹாஸ்டல் ரூம்மேட்ஸ் எல்லோரும் கேட்டு பார்த்துட்டோம. வாயே தொறக்கமாட்றா மேடம்” பக்கத்தில் இருந்தவள் நட்பு கலந்த பாசக் கவலையோடு சொன்னாள்.
"சரி நீ காலேஜ் முடிஞ்சதும் என்ன வந்து பாரு! லேப்லதான் இருப்பேன்.”
"ஏய் அவ வரலன்னாலும் நீங்க வலுகட்டாயமா கூட்டிட்டு வாங்கடீ!”
வேண்டுகோளை முன்வைத்துவிட்டு நகர்ந்தாள்.
சம்பளத்துக்கு மட்டுமே பேராசிரியர் வேலை பார்க்கும் பெரும்பாலானோர்கள் மத்தியில் பிரவீணா தனியே தெரிவாள். இயந்திரத்தனமாக பாடம் நடத்திவிட்டு போவது மட்டுமல்ல அவள் வேலை. ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்து, அவர்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க துடிக்கும் உள்ளம் அவளுக்கு.
மாணவிகளின் பிரச்சனை மட்டுமல்ல, உடன் பணிபுரிவோரின் பண-மன பிரச்சனைகளைக்கூட தீர்க்க முனைபவள்.
மாலை.
தோழிகள் சத்யாவை அழைத்துவந்து பிரவீணாவிடம் ஒப்படைதார்கள். அதற்காக எதிர்பார்த்திருந்தவளாய் "அப்பாடா . . . வந்துட்டாளா! நீங்க மட்டும் இவள கூட்டிட்டு வரலேன்னு வச்சுக்கோங்களேன். நானே. . . ஹாஸ்டலுக்கு வந்துடறதுன்னு இருந்தேன்.”
"சரிம்மா. சத்தியா. . .இப்பவாது வாயை தெ}ற. ஊருல என்ன பிரச்சனை?”
" ……”
" உனக்கு கல்யாண ஏற்பாடு ஏதாவது பண்ணிட்டாங்களா?”
"ஐயோ. . . இல்லிங்க மேடம்” என்று அதிர்ச்சியோடு வாய் திறந்த சத்யா, பின்னால் திரும்பி தோழிகளை பார்த்து தயங்கினாள்.
"சரி ஏம்பா . .. . நீங்க இவளுக்காக வெய்ட் பண்ண வேண்டாம். நீங்க கிளம்புங்க. நானே இவள ஹாஸ்டல்ல விட்டுட்டு போறேன்.”
அவர்கள் புறப்பட்டு போனதும் சத்யா, "மேடம் . . . எப்படி சொல்றதுன்னே தெரியல்ல. .. . .”
"பரவாயில்ல சொல்லு”
"எங்கம்மா சாகபோறாங்க மேடம். அவங்களுக்கு கேன்சராம் .” அடக்க முடியாமல் அழுதாள்.
"…ம்ம்…என்ன கேன்சர்?”
"பிரஸ்ட் கேன்சர்”
"ஏய் … அழறத நிறுத்து கேன்சர்னாவே செத்துடுவாங்கன்னு அர்த்தமில்ல சத்யா. அதுவும் பிரஸ்ட் கேன்சர்லாம் இப்போ சாதாரண விஷயம்.”
"இல்ல மேடம். ஆப்பேரஷன் பண்ணனும், அப்புறம் ஏதோ ரேடியேஷன். . . கீமோ . தலைமுடியெல்லாம் கொட்டி, உடல் எலச்சி . . . ” வாக்கியத்தை உடைத்து " எங்கம்மாவ … அப்படியெல்லாம் பார்க்க முடியாது. மேடம். . . என்னால ”
"அடி பைத்தியக்காரி…, கையில அடிப்பட்டு எலும்பு முறிஞ்சிடுச்சு: மாவு கட்டு போடல..? ஒருமாசம் ரெண்டு மாசம் அந்த கட்டோடவே திரியறதில்ல…? அப்புறம் அவுத்துடறதில்ல…? அது, அதோட ப்ரொசிஜர். அதுபோலத்தான் கேன்சர் டிரீட்மென்ட்டுக்கும் சில ப்ரொசிஜர் இருக்கு. அத பாத்து பயந்தா எப்படி? உனக்கு ஒன்னு தெரியுமா? ஏதோ வரகூடாத வியாதி உங்கம்மாவுக்கு மட்டும் வந்துட்டதா நீ நெனைக்கிறதாலதான் நீ ரொம்ப பதட்டப்படுற, அழுவுற. இப்பலாம் நகரமோ கிராமமோ , நூத்துக்கு பத்து பேருக்கு இது வந்துடுது. படிச்சவ. . . நீதான் அம்மாவுக்கு இதெல்லாம் எடுத்து சொல்லனும். நீயே அழுதுகிட்டிருந்தா . . . ம்ம்?.”
"மேடம். . . நாங்க யாருக்கு என்ன பாவம் பண்ணிணோம்?”
"ச்சீ. .ச்சீ . . பாவம் புண்ணியம் பார்த்து வருமா நோய்? அதுவும் கேன்சர் ஒரு சூழல் தொடர்பான நோய்தானே தவிர, இது தான் காரணம்ன்னு சொல்ல முடியாது. அதே மாதிரி பெரியவங்களுக்கு வரும்… ஏழைகளுக்கு வரும.;.., பெண்களுக்கு வரும்ன்னு பேதம் பிரிச்சி சொல்ல முடியாது. ஓன்னு தெரியுமா…? பிரஸ்ட் கேன்சர் ஆண்களுக்கு வருது.”
"இல்லங்க மேடம். எங்கம்மாவும் ஏதோ சாகப்போற மாதிரியே பேசறாங்க. அக்காகிட்டயும், எங்கிட்டயும் .. . . என்னென்னவோ சொல்றாங்க. ..”
"படிச்ச புண்ணாக்கு… ஒனக்கே அந்த நோய் ஒரு உயிர்கொல்லி நோயாத்தான் தெரியுது. பாவம் அவங்க படிக்காதவங்க. தோ. .. பாரும்மா. . . கேன்சர் டிரீட்மென்ட்டு வெறும் மருந்து சம்மந்தப்பட்டதுமட்டுமில்ல. மனம் சம்மந்தப்பட்டதும். உறுதியான நம்பிக்கையோட, பாஸிட்டீவ் உணர்வோட, எதிர்கொண்டு மருத்துவம் பார்த்துக்கிட்டா சீக்கிரம் குணமாயிடும். இந்த உணர்வ நீதான் அம்மாவுக்கு கொடுக்கனும்.”
"அப்போ”
"பயப்படத் தேவையில்ல. அப்புறம்…இது கட்டி கிட்டின்னு,பச்செல…லேகியம்…அது இதுன்னு கிராமத்து வைத்தியம் பார்த்துக்கிட்டு இருக்காம ,உடனே ,இந்த வியாதிய குணப்படுத்தறதுக்காகவே இயங்கிட்டிருக்கிற அரசு அல்லது தனியார் மருத்துவ மனையில சேருங்க.”
"மேடம் . . .. . இந்த விஷியத்த நான் யாருகிட்டையும் சொல்லல. நீங்களும்….” சத்யா கூட்டி முழுங்கினாள்.
" சொல்லமாட்டேன் மோதுமா? சரி. சொன்னா… உங்கம்மாவுக்கு வந்தது, உனக்கு தொத்திகிட்டு, அவங்களுக்கும் தொத்திக்கும்ன்னு நெனப்பாங்களா? தொத்து வியாதியா இது.?” புறப்பட தயாரானாள் ,பிரவீணா.
"மேடம். . . எங்க அக்காகூட கேட்டா !”
"என்ன… தொத்திக்குமான்னா?”
"ம்கூம். அம்மாவுக்கு வந்ததால… எங்களுக்கும் வருமான்னு. .?”
"தொன்னூத்தியஞ்சு சதவிகிதம் வாய்ப்பில்ல. பாரம்பரிய மரபணுக்கலால வர்ற வாய்ப்பு ரொம்ப ரொம்ப கொறைவு. முன் ஜாக்கிறதையா இருந்து 35 வயசுக்கு மேல, வருசத்திற்கு ஒருமொறை ‘மேமோகிராம்’ பரிசோதனை செஞ்சிக்கிட்டா, அந்த பயமும் வேணாம். சரி. கௌம்பலாமா? நான் உன்ன ஹாஸ்டல்ல விட்டுட்டே போறேன்.”
" மேடம், ஒங்களுக்கு எதுக்கு சிரமம் நானே போயிக்கிறேன்”
"ச்சீ..வா! இன்னொரு விஷியம் தெரியுமா? இந்த காலேஜ்ல ஒரு புரொப்பஸர் பிளட் கேன்சர் பேஷன்ட். பத்து வருஷத்துக்கு முன்னாடி… ஏ.பி.எம்.எல்ன்னு ஒரு வகை பிளட் கேன்சரால அவதிபட்டு, அல்லல்பட்டு, அப்பப்பா…. நீ சொன்ன மாதிரி உடல் எலச்சி, தலை வழுக்கையாகி கன்னமெல்லாம் டொங்கு விழுந்து… ம்ம்ச்ச்;… ஆனா…. எனக்கு தெரிஞ்சி, மருந்துகளவிட அந்த நெலையிலேயும்; நம்பிக்கையோட இருந்ததுதான் அந்த ஜீவனோட ப்ளஸ்."
" பிளட் கேன்சரையும் குணபடுத்த முடியுமா மேடம்”
"ம்ம். இப்போ அதெல்லாம் சாதராணம்மா ஆயிடுச்சி. தொடக்க நெலையில கண்டுபுடிச்சிட்டா ரொம்ப ஈஸி.”
"யாரு மேடம் அந்த பேஷன்ட்?”
" நீ சொல்லு பார்க்கலாம் !”
"இங்கிலீஸ் புரொப்பஸர் இமாம் சார்…!”
பிரவீணா கலகலவென சிரித்தாள். "ஏய்.. அவர பார்த்தா அப்படியா தெரியுது? இரு இமாம் கிட்டேயே சொல்றேன்.”
" மேடம், மேடம்… மாட்டிவிட்டுடாதீங்க. ப்ளீஸ். ”
"ஏய்…சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். நான் தான் அந்த முன்னாள் கேன்சர் பேஷன்ட் ”
சத்யா பேரதிர்ச்சியானாள். பிரவீணாவை உச்சந்தலையிலிருந்து பாதம்வரை ஒருமுறை கூர்ந்துபார்த்துவிட்டு,
" மேடம்….”
"ஆமாம்டா.. இப்போ… ஐயம் ஆல் ரைட் அண்ட் நார்மல். வருஷத்துக்கு ஒரு தடவ, பீரியாடிக்கல் செக்-அப். அவ்வளவுதான்.”
"சரி. வா போலாம்” சத்யாவின் தோள் மீது கையை போட்டு நடக்க தொடங்கினாள், பிரவீணா.
சத்யாவின் கண்கள் மீண்டும் ஏனோ கலங்கியது. அவள் கழுத்தை திருப்பி , தன் தோள் மீது படர்ந்திருந்த பிரவீணாவின் கைவிரல் பகுதியில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்து நடக்கத்தொடங்கினாள்.
புதுவைப்பிரபா
Monday, December 19, 2011
எனது கவிதைக்கு முதல் பரிசு
Thursday, December 15, 2011
Thursday, November 3, 2011
உணர்வுள்ள எழுத்தாளர்கள் உடனே ஒப்பமிடுங்கள்

சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எனும் சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். அதற்காக தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது அமைந்திருக்கும் இடம், அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. இதிலேயே மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்தவும் முடியும்.
ஆகவே, தமிழக அரசு தனது அமைச்சரவை முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.
கீழ்காணும் லிங்க்கை சொடுக்கி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஒப்பமிடுங்கள். . . நூலக எதிர்ப்புக்கு ஆதரவு கொடுங்கள். . .
http://www.change.org/petitions/chief-minister-of-tamil-nadu-miss-jjayalalithaa-to-withdraw-the-decision-of-shifting-anna-centenary-library
Tuesday, November 1, 2011
மாற்றம்

"அமைச்சர் பங்களா
கட்டுவதற்கு முன்னால்
இங்கு ஒரு பெருவெளி இருந்தது"
மகன் பேரனிடம் சொன்னார்.
"இந்த பெருவெளிக்கு முன்னர்
இவ்விடம் மணல்மேடுகளோடு
நிறைந்திருந்தது "
நான் மகனுக்கு சொன்னேன்
"இங்கு ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது"
என் தந்தை எனக்கு சொன்னார்.
புதுவைப்பிரபா
(இக்கவிதை “கல்கி” வார இதழின் கவிதை கபே பகுதியில் வெளிவந்தது)
Subscribe to:
Posts (Atom)
