Saturday, June 30, 2012

மழையெனப்படுவது…




ஆகாய மலையிலிருந்து
ஆர்ப்பரித்து கொட்டும் அருவி
நிலப்பரப்பில்-
மேடெது பள்ளமெது என்று
அறிய உதவும் கருவி.

மேகப் பிள்ளைகள்
மோதிக்கொள்வதைப் பார்த்த
வானத் தாயின் அழை!
காலம் -
பூமியை கௌரவித்து போர்த்தும்
நீர் ஆடையின் இழை!

நீர் மை ஊற்றி
வானம் வரையும்
நேர்கோட்டோவியம்.
மண் மன்னனை மகிழ்விக்க
காற்றுப் புலவன் படைக்கும்
ர்20 காவியம்.

தொண்டை வரண்டு கிடக்கும்
நதிகளின்
தாகம் தீர்க்கும் பானம்.
அது-
ஆகாயப்பானையிலிருந்து
பொங்கி வழிகிற வானம்.

அறிவியல்பூர்வமாய்
பார்க்கப்போனால்
அதன் பெயர்
நீரியல்சுழற்சி
அப்படியே பார்த்தால்-
தூறல் பாட
இடி இசையமைக்க
மின்னல் நடனமிட
அது இயற்கையின்
ஆடலும் பாடலும் நிகழ்ச்சி

உச்சி வானத்தையும்
தாழ கிடக்கும் பூமியையும்
இணைக்கும்
சமத்துவ பாலம்
மேலிருந்து விழுந்து
மண்ணுக்குள் நுழைந்து - பின்
செடி-கொடி-மரம்-புல்-பூண்டென
முளைத்து வருகிற ஞாலம்.


புதுவைப்பிரபா

Monday, June 18, 2012

நடிகை தமனாவின் தீவிர ரசிகன் ஒருவன்...கனவுலகில்... தமனாவின் காதலனாக மாறி...கற்பனையில் பாடுகிறான். இதை பாட்டுக்கான களமாக வைத்து புனையப்பட்ட பாடல் இது....

http://www.youtube.com/watch?v=N1Wvag0zTuA&feature=plcp