Sunday, December 27, 2009

வேண்டுகோள்

மரணப்படுக்கையிலே மல்லாந்து படுத்துக்கொண்டு
மூச்சுவிட திணறுதிங்கே உலகம் - காரணம்
சாதிமத பேதமென்னும் கலகம்

கருவிழிகள் நீர்சொரிய காண்கின்றேன் சகமனிதன்
மனிதனையே வெடிவைத்து வெடிக்க - இதயம்
உடல்விட்டு வெளிவந்து துடிக்க

ஊர்போகும் பேருந்தின் உள்ளிருந்து திடுமென்று
தலை ஆறாய் உடல்நூறாய் சிதறும் - குழந்தை
கைபிய்ந்து கால்பிய்ந்து கதறும்

பழிவாங்கும் நோக்கோடு பைத்தியம்போல் அலைகின்றார்
அப்பாவிகளை வெறிகொண்டு தாக்க - இங்கு
யாருமில்லை மனிதநேயம் காக்க

ஒப்பாரிக்கு ஓய்வு தர உறுதிகொள் மனிதா
வெடிவைக்கும் மனப்போக்கை அழிக்க - இனி
அமைதிகொள் புவிப்பந்து செழிக்க

முயன்றால் முடியாதது ஏதுமில்லை தெரியாதா
மனது வை மனிதா அஃது முடியும் - நாளை
வன்முறையற்ற உலகம் விடியும்

மாந்த சமதளத்தில் வகுப்பின வரப்புகளை
அமைத்தபடி பிரிவினைகள் எதுக்கு - தகர்த்து
ஒற்றுமை சமபரப்பை செதுக்கு

பாபரோ ராமரோ பெயர் பிரித்து பார்க்காமல்
நட்பு கொண்டு நெஞ்சோடு இறுக்கு - உலகம்;
உய்த்தலில் உன் பங்கும் இருக்கு.

-புதுவைப் பிரபா -

நன்றி-புதுவை பாரதி இதழில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த படைப்புகளில் சிறந்த படைப்பென பரிசுக்கும் பாராட்டிற்கும் தேர்வு பெற்ற கவிதை

Saturday, December 26, 2009

ஒற்றுமை



பகிர்ந்துண்ணும் பழக்கம்
காணாமல் போயிருந்ததால்
வைத்த ஒரு தட்டு சோற்றையும்
ஒண்டியாய் உண்ண நினைத்தது
ஒரு காகம்

உண்ண எத்தனித்தபோது
எதிர்பாராமல்;
இன்னும் சில காகங்கள்
வந்தமர்ந்தது

உண்ணுவதை விட்டுவிட்டு
வந்த காகங்களை
விரட்டுவதிலேயே
குறியாய் இருக்க. . .

இடைப்பட்ட நேரத்தில்
அங்கு வந்த பூனையொன்று
பசியாறிப்போயிற்று

எந்த காகத்திற்கும்
பருக்கைச் சோறுக்கூட
கிடைக்காமல்போனது

ஆனாலும்-
"அப்பாடா. . .யாருக்கும் கிடைக்கலை"
வருத்தமற்று, நிம்மதியாய்
பறந்துபோயின காகங்கள்
தமிழ் எழுத்தாளர்கள் குடியிருப்பு
மாடி ஒன்றிலிருந்து.


Monday, December 14, 2009

இப்படியுமிருக்கலாம். . .


தலைவரைப் போல
தானும் தோற்றமளிக்கவேண்டும்
என்ற எண்ணம் கொண்ட
தொண்டனாக இருக்கலாம்

சாத்திர சம்பிரதாய சிறையில்
சிக்குண்டுவிட்ட
சாமானியனாக இருக்கலாம்

காணிக்கையாக்கிவிட்டால்
கடவுள் கண்டிப்பாக கண் திறப்பார்
என்று கனவு காண்பவனாக இருக்கலாம்

அஞ்சுக்கும் பத்துக்கும்
சிங்கியடித்துக்கொண்டு
வாழ்க்கை வண்டி ஓட்டும்
வறுமையாளனாக இருக்கலாம்

தன் முகத்தில் இருக்கும்
சிற்சில குறைகளை
மூடிமறைக்கும்
முயற்சியாக கூட இருக்கலாம்

எது எப்படியிருந்தாலும்
தாடியோடு திரிபவர்களையெல்லாம்
தயவு செய்து
காதலில் தோல்வியடைந்தவர்களின்
கணக்கில் சேர்த்துவிடாதீர்கள்!

Monday, October 12, 2009

ஈழ தமிழருக்கான பாடல்

ஈழ தமிழருக்காக மே மாதம் எழுதிய பாடல்
இப்பாடல் மதிப்பிற்குரிய அய்யா பழ.நெடுமாறன் அவர்களால்
வெளியிடப்பட்டது .
நான் வரிகளில் கொட்டிய உணர்வை உணர . . .

Friday, June 19, 2009

சின்னஞ்சிறுகதை

பொய் சொல்லக்கூடாது அப்பா

~~வளர்ந்துட்டேயில்ல. . .தர்ட் ஸ்டாண்டர்ட் வேற போயிட்ட. . .இனிமேää நீயேää தானா குளிக்க கத்துக்கணும்.. . சரியா. . . அம்மா சொன்ன வார்த்தைகளுக்கு முதன்முறையாக உயிர் கொடுக்கää குளியலறைக்குள் நுழைந்தான்ääராகுல்.
முதலில் அவன் கண்ணில் பட்ட சோப்பு டப்பாவை எடுத்துää சோப்பை இரண்டு மூன்று முறை திருப்பித்திருப்பி பார்த்துக்கொண்டிருக்கும்போதேää அவன் மனது ääஅதிகாலையில்ää அப்பாவும் எதிர்வீட்டு டேனியல் மாமாவும் பேசிக்கொண்டிருந்த நொடிகளுக்கு பின்நோக்கிச் சென்றது.
~~ ஏன் சார். . .நீங்க எப்பத்தான் உங்க கம்பனியில சீனியர் மேனேஜரா ஆவறது?
~~டேனியல் சார். . . நான் நெனச்சிருந்தாää ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே ஆகியிருக்கலாம். என்ன. . .சோப்பு போட்டிருக்கணும்.மத்தவங்க மாதிரி நானும் சோப்பு போட்டிருந்தேன்னா. . . இந்நேரம் சீனியர் மேனேஜரா என்ன ääரீஜனல்; மேனேஜராகவே ஆகியிருப்பேன். ஏன்ன பண்ணறது? ஏனக்குன்னு இல்லீங்க. . .எங்க பரம்பரைக்கே சோப்பு போடற பழக்கமே கிடையாது.
மீண்டும் சோப்பை இரண்டுடொருமுறை திருப்பித்திருப்பி பார்த்துவிட்டுää ~ ச்சே! நம்மல பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டுääஇப்போ அப்பாவே இப்படி அப்பட்டமா பொய் சொல்றாரே! ராகுல் தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.
விசயம் வினங்கும்வரையோääஅல்லது யாராவது விளக்கும்வரையோää அப்பாவை பற்றிய நினைப்பு அவனுக்குள் மாறப்போதவதேயில்லை.
-புதுவை பிரபா-

சிறுகதை-2

காலை பத்து மணி.
~~அடுத்தது நாமதான். தயாராயிரு சந்திரன்ää தன் மனைவி தேவகியிடம் சொன்னான்.
~~ என்னங்க. . . என்னால முடியிலீங்க. எட்டு மணிக்கு இந்த எழவெடுத்த அஸ்பித்திரிக்குள்ள நுழைஞ்சோம். இன்னும் டாக்டர பார்த்தபாடுயில்ல.. சுவற்றில் தன் தலையை சாய்த்துக்கொண்டிருந்தபடியே தேவகி முணுமுணுத்தாள்
~~தோ. . . . . தோ. . . . . அடுத்தது நாமதான்
அரசு மருத்துவமனையின்; புற நோயாளிகள் சிகிச்சைப்பிரிவில் கூடும் கூட்டத்திற்கு அளவேது? நோய்கள் நிரம்பிய இவ்வுலகில் மருத்துவருக்காக நோயாளிகள் காத்துக்கொண்டிருப்பதுää நாட்கள் கணக்கில் கூட நீள்வதுண்டு.
~~தேவகி. . . . தேவகி. . . அட்டன்டரின் குரலில் தேவகிக்கு நோய் தீர்ந்துவிட்டது போன்ற சந்தோஉம். சந்திரனும் தேவகியும் உள்ளே நுழைந்தார்கள். ~~ பேரு சொல்லுமா
~~தேவகி
~~என்ன பிரச்சனை உனக்கு?
~~ஒருவாரமா பயங்கரமா தலைய வலிக்குது டாக்டர். மண்டைக்குள்ள மெஉpன் வைச்சு ஓட்டுராப்ல இருக்கு.
~~அப்படியா!
ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்துக்கொண்டிருங்கும்போதேää
~~தேவையில்லாத வேலைகளையெல்லாம் இவளே இழுத்துபோட்டுகிட்டு செய்யறா. அதுக்கூட இவ தலைவலிக்கு காரணமா இருக்கலாமில்ல டாக்டர். . . அப்பாவித்தனமாக சந்திரன் கேட்டான்.
டாக்டர் அதை பொருட்படுத்தவேயில்லை. ஆமாம். இதுபோன்ற கேள்விகெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அவர் ஸ்டேடஸ் என்னாவது?
ஒரு சீட்டில் கிறுக்கிகொண்டேää ~~ பாரும்மா.... ரத்தம் டெஸ்ட்டுக்கு எழுதிகொடுக்கிறேன். பதினெட்ல போய் ரத்தம் கொடுத்துட்டு வெயிட் பண்ணு. . . ஒரு மணிநேரத்துல ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் வந்திடும். அத வாங்கிட்டு வந்து என்ன பாரு. .. . .
~~திரும்பவும் லைன்ல நிக்கனுமா டாக்டர் தேவகி பரிதாபத்துடன் கேட்டாள்.
~~நோ. . . . நோ. . . . தேவையில்ல. ரிசல்ட் கொண்டு வந்திங்கனா . . . நேரா உள்;ளே வரலாம். . .
வெளியே வந்ததும்ää அட்டன்டரை கேட்டான்;ää சந்திரன். ~~பதினெட்டு எங்கண்ணே இருக்கு. . . ?
~~கீழ்தளத்துல . . . படிக்கட்டுல இறங்கின உடனே . . . பீச்சாங்கை பக்கதுல பாரு போர்டு தெரியும் கடுகடுப்பான குரலில் பதில் வந்தது. என்ன செய்வது? ஆண்டுகள் ஆயிரம் போனாலும் அரசு மருத்துவமனை அட்டன்டர்கள் மட்டும் கனிவாகப்பேச கற்றுக்கொள்ளப்போவதே கிடையாது. அவர்களை மாற்றவும் முடியாது. அவர்களால் மாறவும் முடியாது.
பதினொரு மணி.
சைலண்ட் மோடில் இருந்த செல்போன்ää வாசுவின் பாக்கெட்டுக்குள் அதிர்ந்தது.
~~ஹாய் . . . . மாலா. . . ? லோ டெசிபலில் பேசினான்.
~~ லேப்ல தான் இருக்கேன். அப்படியில்ல . . . டூட்டி டைம்லää அனாவசியமா போன்ல பேசிகிட்டு இருக்கக்கூடாதுன்னு நேத்துதான் சீப் டாக்டர் சொன்னார் அதான். . . .
~~வேணாம் வேணாம். கட் பண்ணிடாத. இப்பநான் பேசிகிட்டு இருக்கிற மாதிரியே யாருக்கும் தெரியாது. வேலையை பார்த்துகிட்டேதான் பேசறேன்.
ஒரு மாதம் முன்பு வரை மாலாவும் வாசுவும் தனியார் மருத்துவமனை ஒன்றில்ää ஒன்றாக தான் வேலைபார்த்து வந்தார்;கள். அரசாங்க மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் கிடைத்தவுடனே வாசு இங்கு வந்து சேர்ந்துவிட்டான். ஒன்றாக இருக்குவரை அவர்களுக்குள் நட்;பாக இருந்த உறவுää பிரிவில் காதலாக உருமாறியது.
காதலுக்கு கண் மட்டும்தான் கிடையாது. ஆனால் காதலர்களுக்கு எதுவுமே கிடையாது. நேரம்காலம் பார்க்காமல் போன் செய்துää கண்டதையும் பேசி நேரத்தையும் பணத்தையும் வீண்ணடிப்பவர்கள் அவர்கள்.
பனிரெண்டு மணி
ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டதும்ää ~~என்னங்க டாக்டர் இப்படி சொல்லிட்டாரு? தேவகிää விரக்தியாய் கேட்டாள்.
~~ நான் அப்பவே சொன்னேன் பார்த்தியாää ஒனக்கு ஒன்னுமில்லையின்னு. சாதா தலைவலிதானாம். அவருதான் மாத்திரை கொடுத்து இருக்காருல்ல அத தவறாமல் சாப்பிடு. தலைவலி நிக்கலேன்னா அடுத்தவாரம் இதே கிழமையில வரசொல்லியிருக்காருல்ல. . . அப்போ வந்து பார்ப்போம்.
~~எதுக்கும் மாலா சொன்னமாதிரி அவ வேளை செய்யற ஆஸ்பிட்டல்லேயே செக் பண்ணிப்பார்ப்போமா?
அதிர்ச்சியாய் திரும்பிபார்த்த சந்திரன்ää
~~அடிப்பைத்தியக்காரி. . . அங்க போனா எல்லாத்துக்கும் காச கொண்டாää பணத்த கொண்டான்னுää பேய் புடுங்கிறமாதிரி புடுங்கிடுவாங்கää அதுவும் இல்லாம அதுக்கு இதுக்குன்னு சொல்லிää மாலாவோட சம்பளத்துலேயே முழுசா கை வச்சிடுவாங்கான்ன. அதனாலதான் நாம ஜி.எச்யிலேயே மாலாவுக்கு தெரியாம காட்டிடலாம்ன்னு நீ சொன்னதால தானே மைலத்துக்கு போவறதா அவகிட்ட பொய் சொல்லிட்டு இங்க வந்தோம். . . .இப்போ நீயே இ;ப்படி பேசற. . .
மாற்றி மாற்றி பேசுவது பெண்களுக்கு ஒன்றும் புதுசு அல்லவே.
ஒரு மணி
வாசுவை கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டிருந்தார் ääடாக்டர்.
~~ நீ செய்தது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா?. தேவிங்கற பேஉன்ட்;டோட பிளட் ரிப்போர்ட்டையும் தேவகிங்கிற பேஉன்ட்டோட பிளட் ரிப்போர்ட்டையும் மாத்தி மாத்தி எண்டிரி பண்ணியிருக்க. தேவிங்கற பொண்ணுக்கு சின்ன கம்ப்ளெய்ன்ட் .அவங்க பிளட்ல இப்படிப்பட்ட பிரச்சனை இருக்க வாய்ப்பில்லையேன்னு சந்தேகப்பட்டு அவங்கள ரிப்பீட் பிளட்டெஸ்ட் பண்ண சொன்னேன். அந்த ரிசஸ்ட்ட வச்சிதான் என்ன தப்பு நடந்திருக்குன்னு என்னால ஒரு முடிவுக்கு வர முடிஞ்சுது.
தேவி - ஓ.கே. ஆனா தேவகி. . . ? அவங்களுக்கு டபிள்யு. பி. சி. கவுண்ட்ஸ் சுத்தமா டவுணா இருக்கு. அந்த கவுண்ட்ஸ் வேல்யுவ பார்;க்கும்போதாவது நீ முழிச்சிகிட்டு இருக்க வேணாமா?. லிக்யுமியாவா இருக்கலாம். அப்படியிருந்தா அந்த கேஸ் ரெண்டு மூணு நாளைக்கு தாக்குபிடிக்கிறதே கஉ;டம்.
தேவிää தேவகி . . . வேற வேற பேருää வேற வேற ஹாஸ்பிட்டல் நெம்பர். இருந்தும் உன்னோட கேர்லெஸ்னெஸ்னால ஒரு உயிரு போகப்போகுது. பை சான்ஸ்ääஅவுங்க வேற ஒரு ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டா பரவாயில்ல.அப்படி இல்லேன்னா. . .நோ . .நோ. . நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. தேவகியோட கேஸ்உpட்ல இருக்கிற அட்ரச கண்டுபிடுச்சு அவங்ள உடனே கூட்டிட்டு வரவேண்டியது உன்னோடபொறுப்பு. அவங்களுக்கு உடனே போன்மேரோ பண்ணிட்டு ääகிமோதெரபி ஆரம்பிக்கனும்.
பிரச்சனையின் ஆழத்தை உணர முடிந்ததால் வாசுவிற்கு ~சாரி சொல்லக்கூட கூச்சமாயிருந்தது.
~மாலாவிடம் பேசிக்கொண்டே... ச்சே! அவனுக்குள் காலம் கடந்த ஞானம் .
ஓரிரு நிமிடங்களில் விலாசத்துடன் புறப்பட்டான்.
இரண்டு மணி. ~~என்னங்க நீங்களும் போய் குளிச்சிட்டுவந்து சாப்பிடுங்க. உங்க மேல வர்ற ஹாஸ்பிட்டல் வாசனைய வச்சு மாலா கண்டுபிடிச்சுடப்போறா. அவளுக்கு சந்தேகம் வந்துட்டுதுன்னு வச்சிக்கோங்கää யாருக்காவுது போன் கீன் பண்ணி எப்படியும் தெரிஞ்சுக்குவாää அவள பத்தி உங்களுக்கு தெரியாது. தேவகி எச்சரித்தாள்.
~~ அடிப்போடி. .. அவள பத்தி எனக்கு தெரியாதா? தெரிஞ்சதனாலதானää கேஸ்உட் பதியும்போதுää பேர மட்டும் தேவகின்னு எழுதிட்டுää அட்ரஸ்கிட்ரசலாம் தாருமாரா மாத்தி மாத்தி எழுதி கொடுத்துட்டேன். உண்மையிலேயே அப்படி ஒரு அட்ரஸ் இருக்குமான்னே சந்தேகம்தான். அதனாலää நம்ம பொண்ணால மட்டுமில்ல வேற யாராலேயும் நம்மல கண்டேபிடிக்க முடியாது. சந்திரன் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும்போதே வலியில் துடித்த தேவகி குரல் கொடுத்தாள்.
~~ என்னங்க. . . தலைய திரும்பவும் வலிக்குதுங்க. உயிர்போவற மாதிரி வலிக்குதுங்க. . . .
-புதுவை பிரபா-

Thursday, June 18, 2009

சிறுகதை-1

பரிசு
வீட்டிலிருந்தவர்கள் ஆளுக்கோர்; யோசனை சொன்னார்கள். ~ஏம்பா. . .இந்த சட்டை வேணாம்பா. . . அந்த கதர் சட்டைபோல ஒன்னு சந்தன கலர்ல வச்சியிருக்கியே. . . அத போட்டுட்டுப்போ. . என்றார் அப்பா.
~என்னங்க . . . இன்னிக்கி நான்தான் உங்களுக்கு தலை வாரிவிடுவேன். அப்பதான் போட்டுவுல நல்லாயிருக்கும் மனைவி சொன்னாள்.
~அண்ணே! பஸ்டாண்டுக்கு ஆட்டோவுல போகாத. . . நான் வண்டியில கொண்டுபோய் விடுறேன் என்று தம்பி கூறினான்.
ஒரு தொலைக்காட்சி நடத்திய தனித்திறன் போட்டியில் எனக்கு முதல் பரிசு.
இன்று மாலை சென்னையில்ää ஒரு திருமணமண்டபத்தில் அந்த தொலைக்காட்சியின் ஆண்டு விழாவும்ää சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளும் அதற்கிடையில் பரிசளிப்பு விழாவும் நடக்க இருக்கிறது.போட்டி முடிவுகள் வந்த நாளிலிருந்தே வீட்டிலிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி. இன்று என்னை விழாவிற்கு வழியனுப்பும் அத்தனை பேருக்கும் ஆர்வமும் சந்தோசமும் இரட்டிப்பாய் இருப்பதை உணர முடிந்தது.
கலைபண்பாட்டுதுறை அமைச்சர் கமலகேசவன்;; கரங்களால் பரிசுபெறுவது என்பது சாதரண விசயமாக இருந்தாலும் எனக்கு அது சாகித்திய அகடமி விருது பெறுவதுபோல சந்தோசமாக இருந்தது.
புதுவையிலிருந்து மூன்றரை மணிநேரம் பயணம் சென்னைக்கு.பேருந்து புறப்பட்டதும் என் மனப்பறவை சிறகை அகலமாய் விரித்தது.
ஆயிரம்பேர் கொண்ட கூட்டத்தில்ää மேடையேறி முதன்முதலாக பரிசுபெறப்போகும் காட்சியை பல்வேறு விதமாக யூகித்துக்கொண்டிருந்ததுääமனசு. மேலும்ää பரிசு தந்ததும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசச்சொல்வார்கள் அல்லவா. . . அதற்கு முன் ஏற்பாடாய் ஆறுவாக்கியங்கள் கொண்ட ஓர் உரையை நூறு முறை பேசி ஒத்திக்கை பார்த்தது. முன்றுமணிநேர நிகழ்ச்சியில் ää என் அல்லது நான் சம்பந்தப்பட்டதென்னவோ அதிகபட்சமாய் மூன்று நிமிடம்தான். ஆனால் அதற்குபோய். . . மூன்று நாட்கள் தூங்காமல். . . .
மேடையேறியவுடன் மக்கள் கூட்டத்தைப்பார்த்து கைகூப்பிஉயர்த்தி வணங்குவார்களே அதுபோல் செய்ய வருமா? அல்லது நம் செய்கையில் செயற்கைத்தனம் மேலோங்கி நின்று ää கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்துமா? அமைச்சரின் அருகில் சென்றதும் கைகுலுக்கிக்கொள்வதா? அல்லது கும்பிடு போடுவதா? எறும்பு போன்று வரிசையாய் யோசனைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துக்கொண்டிருந்தன.
விழா அரங்கம்.
முதல்வரிசையில் எனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்துகொண்டிருந்த போதிலும் உண்மையில் நான் சந்தோசம்ääஆர்வம்ää லேசான பயம் கொண்ட ஊடகத்திற்கிடையில் மிதந்து கொண்டிருந்தேன்.
அரசியல்வாதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஏதும் குறிக்கப்பட்ட காலத்தில் தொடங்குவது சாத்தியமில்லாதது. ஒரு மணிநேரம் தாமதமாக நிகழ்ச்சித்தொடங்கியது.
முதலில் விழாவிற்கு வருகை தந்திருந்த தொலைக்காட்சி பங்குதாரர்கள்ää நிகழ்ச்சிஅமைப்பாளர்கள்; பேசினார்கள். தொடர்ந்து சினிமாத் துறையை சார்ந்தவர்கள் கதைத்தார்கள்.
நிமிடங்கள் தேய்ந்துகொண்டிருந்தது. கலை நிகழ்ச்சியின் ஒரு பங்கை அமைச்சர் கமலகேசவன் பேசுவதற்;கு முன்பே அரங்கேற்றினார்கள். எனக்கு டென்சன் தாங்க முடியவில்லை. யார் யாரோ பேசினார்கள். நிகழ்ச்சிக்கு மைக்செட் ஏற்பாடு செய்து கொடுத்தவன்கூட காலநேரம் பார்க்காமல் கத்திபோட்டுக்கொண்டிருந்தான். இதற்கிடையில் ää அமைச்சர் எழுந்து கையசைத்துவிட்டு மேடையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் பொறுமையாய் காத்திருந்தேன். நிகழ்ச்சி முடிய கால்மணி நேரம் இருக்கும்போதுää ஒரு ஆசாமி ää நிகழ்ச்சி எற்பாடு செய்த தொலைக்காட்சியின் அடையாள அட்டை பொருத்தியிருந்தார் ää ~சார். . .நீங்கதான பாண்டிச்சேரி. . .பாரதிகுமார்.? ஒரு நிமிடம் என்று சொல்லியபடியே பவ்யமாய் குனிந்து காதருகே வந்;துää ~சார் . . . . கோவிச்சுக்காதீங்க . . . நேரம் இல்லாமபோச்சு. அமைச்சருக்கு ஏதோ அர்ஜென்ட் வேலையாம்ää அவரும் போயிட்டார். அதனால . .. . என்றபடி. . . தன் கையிருந்த பரிசுப்பொட்டலம்ää மலர்க்கொத்துää எனக்கு மேடையில் அணிவிக்கவிருந்த சால்வை இவற்றை என் மடியில் வைத்துவிட்டு சென்றார்.
நடுரோட்டில் நிற்கவைத்து ~நச்சென்று நடுமண்டையில் யாரோ செருப்பால் அடித்தது போன்று இருந்தது ää எனக்கு .
என் கரங்களில் திணிக்கப்பட்டவை பரிசுகள் போல தோன்றாமல் ää மாறாக ஏதோ அவமானச்சின்னங்கள் என்மீது கிடப்பதாக தோன்றவேääவிருட்டென்று எழுந்து அவைகளை அந்த இருக்கையிலேயே விட்டுவிட்டு வீடு நோக்கி புறப்பட்டேன்.
- புதுவைப் பிரபா-

எனது படைப்புகள்











Wednesday, June 17, 2009

கவிதை

வேண்டுகோள்



மரணப்படுக்கையிலே மல்லாந்து படுத்துக்கொண்டு


மூச்சுவிட திணறுதிங்கே உலகம் - காரணம்


சாதிமத பேதமென்னும் கலகம்



கருவிழிகள் நீர்சொரிய காண்கின்றேன் சகமனிதன்


மனிதனையே வெடிவைத்து வெடிக்க - இதயம்


உடல்விட்டு வெளிவந்து துடிக்க



ஊர்போகும் பேருந்தின் உள்ளிருந்து திடுமென்று


தலை ஆறாய் உடல்நூறாய் சிதறும் - குழந்தை


கைபிய்ந்து கால்பிய்ந்து கதறும்



பழிவாங்கும் நோக்கோடு பைத்தியம்போல் அலைகின்றார்


அப்பாவிகளை வெறிகொண்டு தாக்க - இங்கு


யாருமில்லைமனிதநேயம் காக்க



ஒப்பாரிக்கு ஓய்வு தர உறுதிகொள் மனிதா


வெடிவைக்கும் மனப்போக்கை அழிக்க - இனி


அமைதிகொள் புவிப்பந்து செழிக்க



முயன்றால் முடியாதது ஏதுமில்லை தெரியாதா


மனது வை மனிதா அஃது முடியும் - நாளை


வன்முறையற்ற உலகம் விடியும்



மாந்த சமதளத்தில் வகுப்பின வரப்புகளை


அமைத்தபடி பிரிவினைகள் எதுக்கு - தகர்த்து


ஒற்றுமை சமபரப்பை செதுக்கு



பாபரோ ராமரோ பெயர் பிரித்து பார்க்காமல்


நட்பு கொண்டு நெஞ்சோடு இறுக்கு - உலகம்;


உய்த்தலில் உன் பங்கும் இருக்கு.


-புதுவைப் பிரபா -


கவிதையெனப்படுவது. . .



எழுத்துகளுக்கிடையில் எண்ணங்கள்


வார்த்தைகளுக்கிடையில் உணர்வுகள்


வரிகளுக்கிடையில் எதார்த்தங்கள்


நிறைத்து நிற்பது


நிதர்சன கவிதை



முதுகலை மாணவனோ


முறுக்குவிற்கும் மன்னாதனோ


யார் படித்தாலும் புரிவது கவிதை


விடுத்து-


புரியாத ஒன்று


கவிதை வேடம் கொண்டு வருமாயின்-


அதை தூக்கி எறியுங்கள்


தின்னட்டும் கழுதை



கவிதை-


ஒரு பெருங்கதை பேசும்செய்தியைக்கூட


இரண்டே அடிகளில்அடக்கிவிடும்


படிப்பவன் படித்துமுடிப்பதற்குள்ளே


மாற்றங்கள் நிகழ்த்ததொடக்கிவிடும்



கவிதை தேவை-


காதல் அணுக்களை உற்பத்தி செய்ய


மொழிக்கு அழகு செய் ஆடைகள் நெய்ய


மனிதனுக்குள்ளே மனிதம் வடிக்க


அவன் ஆறாவது அறிவை


சாணை பிடிக்க


கவிதை-


காதலர் கைகளில்


முத்தமாய் மாறும்


எதிரிக்கு எழுதும்போது


யுத்தமாய் மாறும்


இரங்கல் பாடுகையில்


கண்ணீராய் மாறும்


புரட்சி பாடுகையில்


செந்நீராய் மாறும்



நம்பிக்கை பாடும்போது


ஏணிவேடம் ஏற்கும்


நண்பருக்கு எழுதும்போது


நட்பு பூ பூக்கும்



பாடுபொருளின் தன்மையை பொறுத்து


கவிதை-


உளியாய் மாறும்


சில சமயம் உலகம் செதுக்க!


சில சமயம் பேரண்டம் பிளக்க!



-புதுவைப் பிரபா -