Monday, May 31, 2010

நானும் நீயும்


கொட்டும் மழையில்-நான்
குடை விரிப்பதில்லை

கொளுத்தும் வெய்யிலில்-நான்
நிழல் தேடுவதில்லை

நடுங்கும் குளிரில்-நான்
ஸ்வெட்டர் அணிவதில்லை

புழுங்கும் அறையில்-நான்
விசிறி கேட்பதில்லை

குடையாய் நிழலாய்
ஸ்வெட்டராய் விசிறியாய்
என் தேவைக்கேற்றபடி
மாற்றம் கொண்டியங்குகிறாய்
நீ!

1 comment:

  1. எல்லாம் நீயென்று
    ஏந்திழையாள் வர்ணித்தாய
    நன்றாய் உமது பணி
    நாளும் தொடரட்டும்
    வாழ்த்துகள் பிரபா

    ReplyDelete