Monday, October 31, 2011

மாற்ற முடியும்




சமைக்கவும் கழுவவும்
பெருக்கவுமே பெண்கள் எனும்
நிலை களைய ஒன்றாய் கூடி

ஊருக்கும் சேரிக்கும் இடையே ஓடும்
சாதி சாளகத்தை
சமத்துவ மண்கொட்டி மூடி

துப்பாக்கித் தோட்டாவும்
வெட்டறுவா வெடிகுண்டும்
நிரந்திரமாய் செயலிழக்கச் செய்து

பொய்- பகட்டு- சூது
வன்கொடுமை இல்லாத
நன்சமூகம் ஒன்று நாம் நெய்து

மாற்றிக்காட்டுவோம்
புவியை மாற்றிக்காட்டுவோம்

மனிதர்களே!
பிரபஞ்சம் தோன்றிய நொடியிலிருந்து
இந்த நொடிவரை
மண்ணில்

மாறாமலே இருப்பது
மாற்றம் மட்டும்தான்

நம்புங்கள். . .
நம்மால் நல்லதாய் உலகை
மாற்றிக்காட்டமுடியும்
இது சத்தியம்
நாம் ஒன்றுகூடி
ஒரே அணியில் நின்றால்
நாளைக்கேகூட இது சாத்தியம்.

-புதுவைப்பிரபா-
(அக்டோபர் மாத இலக்கியபீடம் இதழில் வெளிவந்த கவிதை)

No comments:

Post a Comment