Thursday, July 11, 2013

பிரித்தல் என்னும் பெரும்பிழை





ஒருமுறை கூட
நமக்குள்
சண்டை வந்ததேயில்லை

ஒருவரையொருவர்
முந்திக்கொண்டு
விட்டுக்கொடுக்கப் பழகியதால்
விளையாட்டிற்குக்கூட
நாம்
திட்டிக்கொண்டதோ
அடித்துக்கொண்டதோ இல்லை

நம் வீட்டிற்கு வந்தவர்கள்
ஒருவர் தவறாமல்
“எப்படி இதுங்க ரெண்டும்
இவ்வளவு ஒத்துமையா இருக்கு?” என்று
ஆச்சரியத்துடன்
பார்த்திருக்கிறார்கள்...
கேட்டிருக்கிறார்கள்.

அன்பும் பாசமும்
புரிந்துணர்வும்
நமக்கிடையில்
அபரிமிதமான அளவு
இருந்துகொண்டிருக்கும்போது-
நம்மை பிரித்துவைத்து
நீதிமன்றம்
ஒரு பெரும் பிழை செய்துவிட்டது.
இனி...
நீ...அம்மாவுடனாம்
நான் அப்பாவுடனாம்.

----------------------------------------------------------
புதுவைப்பிரபா

No comments:

Post a Comment