Wednesday, August 7, 2013

உயிர்மூச்சு


உன் விழி தாளை
விரித்து வைத்து
என் விழிகளால்
கடிதம் தீட்டி
புன்னகையின் கைகளில்
கொடுத்தனுப்பிவைக்கிறேன்


நீயும் -
புன்னகை கைகளாலே
அதை வாங்கிக்கொள்கிறாய்

மறைவாய் கிடக்கும்
மனசு மேசைக்குச் சென்று
மௌன புத்தகத்துள்
மறைத்துவைத்து
படிக்கத்தொடங்குகிறாய்

சத்தமின்றி
உன் பின்னால் வந்து நின்று
தோளைத் தொட்டு –
"ஏய். . .திருடி" என்று
கண்சிமிட்டி சிரிக்கிறது
காதல்

புதுவைப்பிரபா

No comments:

Post a Comment