Wednesday, August 7, 2013

கண் தானம் - கவிதை

இமைகளுக்கடியில்
இருள்தனை சுமப்போர்
நிலைதனை  நினைத்துப் பார்த்திடுவோம்
விழிகள் தானம்
தருவதன் மூலம் - அவர்
பார்வையில் வண்ணம் சேர்த்திடுவோம்

மண்ணுக்கு கண் எதற்கு ?
கொடுத்திடுவோம் மனிதருக்கு

புதைத்து எரித்து
சிதைப்பதைத் தவிர்த்து
தானமாய் கொடுத்து
விழி விளக்கேற்றுவோம்!
பார்வையற்றோர்
யாருமில்லாத
உன்னத நிலைக்கு
உலகை மாற்றுவோம்!


புதுவைப்பிரபா

No comments:

Post a Comment