Saturday, September 13, 2014

இளைய தலைமுறை



பேருந்து நிறுத்ததில்
நின்றுருந்த போது
அறுவது வயதை தாண்டியவர்
அருகில் வந்து நின்றார்
புகையிலை நெடி
குமட்டிகொண்டு வந்தது

ஐம்பது வயது ஆசாமி
பின் பக்கம் வந்து நிற்க
பிராந்தி நாற்றம்
குடலை பிரட்டியது

நாற்பது வயது கொண்டவர் வந்து
நான்கு அடி தள்ளி நிற்க
நிக்கோட்டின் வாடை
நெஞ்சை அடைத்தது

அப்போது அங்கு வந்த பேருந்தில்
மூவரும் ஏறிக்கொள்ள
"அப்பாடா" என்று
ஆசுவாசப்பட்ட நொடி

இருபதுவயது இளைஞன்
அருகில் வந்து நின்றான்

இப்போது
ஒருசேர
அந்த மூன்று நாற்றமும் அடித்தது.

----------------------------------------------------------------------------
 புதுவைப்பிரபா

No comments:

Post a Comment