அழகென்ற சொல்லுக்கு
அர்த்தம் தருபவளே !
மூடிய விழிக்குள்ளும்
முழுவதுமாய் வருபவளே !
உன் காந்த விழிப்பார்வை – என்
எண்ணத்தை ஈர்க்குதடி
உனை பார்க்கும் நொடிப்பொழுதில்
நுரையீரல் வேர்க்குதடி
உன் உதட்டில் பூத்திருக்கும்
மெல்லிய புன்னகைப்பூ
அதை பார்க்கின்ற உன் கூடை
பூவிற்கும் பொச்சரிப்பு
பெண்ணே....!
நீ சாய்ந்திருக்கும் கதவாக
நான் ஆகக்கூடாதா ?
உன் விரல் பட்ட வரத்தாலே
என் ஆயுள் கூடாதா ?
புடவை கட்டி நிற்கும் பொன் நகையே!
பூகம்பம் நிகழ்த்தும் புன்னகையே !
உன்னால் ...
ஹார்மோன்கள் சுரக்கிறது
சுயம் எனக்கு மறக்கிறது
ஒவ்வொரு ‘ செல்’ லும் என்னுள்
ரெக்கைகட்டி பறக்கிறது
உன் அழகுநீர் பாய்ந்து பாய்ந்து
என் கற்பனை செழிக்கிறது
உனை வர்ணிக்க வார்த்தை இன்றி
என் தாய்மொழி
விழிக்கிறது
பாரடி..
இந்த கவிதைகூட
அழகாச்சு
உன்னோடு பழகி
ஐயம் ஏதுமில்லையடி -நீ
பிரபஞ்ச பேரழகி
----------------------------------------------
புதுவைப்பிரபா
ReplyDeleteபிரபஞ்ச பேரழகிக்கு பொருத்தமான கவிதை... அசத்தலான வரிகள்...
வணக்கம்
ReplyDeleteதித்திக்கும் கவி வரிகள் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------------------------
தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பிற்கினிய ரூபன் அவர்களின் பாராட்டுதலுக்கும் கவிதைகள் சேர்ந்தமை குறித்த தகவலுக்கும் நன்றி
ReplyDeleteதோழமையுடன்
புதுவைப்பிரபா
சரிதான்...மிகப் பொருத்தம்...! புதுவையில் தாங்கள் எங்கு பணிபுரிகிறீர்கள்? எனது வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்.
ReplyDelete