Tuesday, November 1, 2011

மாற்றம்


"அமைச்சர் பங்களா
கட்டுவதற்கு முன்னால்
இங்கு ஒரு பெருவெளி இருந்தது"
மகன் பேரனிடம் சொன்னார்.

"இந்த பெருவெளிக்கு முன்னர்
இவ்விடம் மணல்மேடுகளோடு
நிறைந்திருந்தது "
நான் மகனுக்கு சொன்னேன்

"இங்கு ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது"
என் தந்தை எனக்கு சொன்னார்.

புதுவைப்பிரபா

(இக்கவிதை “கல்கி” வார இதழின் கவிதை கபே பகுதியில் வெளிவந்தது)

No comments:

Post a Comment